×

பவானிசாகர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி


சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலியாயினர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (35). விவசாயியான இவர் ஜன்னல் ஸ்கிரீன் அமைக்கும் வேலையும் செய்து வந்தார். இவர் வியாபார விஷயமாக மனைவி ரஞ்சிதா (30), மகன் அபிஷேக் (11), மகள் நித்திஷா (7) ஆகியோருடன் நேற்று முன்தினம் காரில் கரூர் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் சாலையில், பவானிசாகர் அருகே எரங்காட்டூர் நெசவாளர் காலனி என்ற இடத்தில் எதிரே வந்த காரும், முருகன்காரும் நேருக்கு நேர் ேமாதின. இதில் முருகன், ரஞ்சிதா, அபிஷேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

நித்திஷா, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்றொரு காரில் வந்தவர்கள் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியை சேர்ந்த மாணவி அக்சரா (21), சென்னை அண்ணா நகரை சேர்ந்த மோகன் (21), சேலம் லைன் மேடு பகுதியை சேர்ந்த சுஜித் (21), திருப்பூர் கொடுவாய் பகுதியை சேர்ந்த விஷால் பத்ரி (21) ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவி அக்சரா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பவானிசாகர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar ,Sathyamangalam ,Murugan ,Mothepalayam ,Methuppalayam, Gowai district ,
× RELATED வாழை மர தண்டில் இருந்து கூடை செய்தல் குறித்து செயல் விளக்கம்